Monday 10 July 2017

Satyam Tamil Day -2


Satyam  Tamil Day -2
"சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மா"
"நானே சத்தியமும் வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்"

இதே போல் உலகில் உள்ள அனைத்து வேதங்களிம் சத்தியத்தை பற்றி சொல்கின்றன. மேலும் அவை சத்தியத்தை தவிர வேறெதுவும் நிலையான உண்மை இல்லை. சத்தியத்திற்கு அய்யன் திருவள்ளுவரை தவிர பெரிய விளக்கம் தர முடியாது. அடுத்தவருக்கு தீங்குவிளைவிக்காத எல்லாமே வாய்மை தான்.
மிக எளிமையாக சொல்லும் பட்சத்தில் சத்யமேவ ஜெயதே, வாய்மையே வெல்லும். மேலும் உண்மை, வாய்மை பற்றி அனைவரும் அறிந்ததே. உண்மையை யாரும் மறைக்க முடியாது. மறைக்கப்பட்டாலும் ஒரு நாள் வெளி வந்தே தீரும், இது போன்று நிறைய நாம் படித்து பின் பற்றி வருகிறோம். இங்கே யோகா உண்மை பற்றிய நிலைப்பாடு எப்படி என்று பார்ப்போம்.
உண்மை என்ற வார்தையில் மட்டும் தான் உண்மை உண்டு. மனதின் எண்ணங்களில் உண்மை, வாய்மை அழுத்தமாக விதைக்க வேண்டும். த்ரி கர்மாவின் படி  அடி மனதில் பொய்மை நிறைந்திருக்கும் பட்சத்தில் அது தான் உங்கள ஐம்புலன்களின் வழியாக, அதாவது பேச்சு மற்றும் செய்கைகளிலும் ப்ரதிபலிக்கிறது. அப்போது பொய்மைதான் வெளிப்படும். அதனால்தான் அனைத்து குருக்களும் சொல்வது "உனக்கு முதலில் உண்மையாய் இரு" நீண்ட நாள் ஒருவர் எல்லாருக்கும் பொய்யானவராக இருக்கமுடியாது. மேலும் அவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடும் பொய்யாகவே இருக்கும். அப்படியானவர்களின் புலனடக்கம் என்பது வராது. அவர்கள் மனதை அடக்க முடியமல். மாறாக இவர்கள் மனதுக்கு அடிமையாகிவிடுவார்கள். அதனால் அவர்களுக்கே அவர்கள் தவறானவர்களாகவும், பொய்யானவர்களாகவும் இருப்பார்கள். மேலும் என்ன நடக்காலாம் என்பதை நீங்களே யோசித்துகொள்ளுங்கள்.
இது எதற்கு என்றால் மனம், எண்ணங்கள் சத்தியத்தின் பால் இருக்க வேண்டும். அங்குதான் யோகத்தின் ஆரம்பம்.
மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அஹிம்சை இல்லாத வாய்மைக்கு பயனல்லை. அஹிம்சைக்கு தான் முக்கியதுவம் தரப்பட வேண்டும். ஓர் இக்கட்டான சூழ்நிலை அஹிம்சையா அல்லது சத்தியமா எது கடைபிடிக்க பட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படின். ஓர் உயிர் காப்பாற்றபட வேண்டும் என்றால் அதற்காக சத்தியத்தை விடுத்து அஹிம்சை கடைபிடிக்கபட்டு அவ்வுயிர் காப்பாற்றபட வேண்டும். மற்ற எல்லா இடங்களிலும் சத்தியமும் அஹிம்சையும் சம அளவே கடைபிடிக்க படலாம்.
காலை முதல் மாலைவரை நான் உண்மையை மட்டும் தன பேசுவேன் என்று உறுதிமொழி செய்து கொண்டு, எனது குரு சொன்னார் உண்மையை தவிர வேறொன்றும் பேச மாட்டேன் என்றுஒருவரிடம் சென்று " அய்யா நீங்கள் மிகவும் அசிங்கமாக இருக்கிறீர்கள்" என்றோ, உங்கள் அருகில் நிற்பவர் நாற்றம் வருகிறது என்பதற்காக அய்யா " உங்கள் மேல் துர் நாற்றம் அடிக்கிறது" போன்று நீங்கள் உண்மையாய் பேச தேவை இல்லை. நீங்கள் முதலில் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். பொதுவாக யாரிடத்தில் தொடர்பு கொள்ளும்போது உண்மை மட்டும் தன பேசுவேன் என்பதை விட பொய் சொல்லமாட்டேன் என்பது தான் அதன் அர்த்தம்.

இந்த பயிற்சிகளை முதலில் உங்கள் வீட்டில் குடும்பத்தில்,நண்பர்கள் இடத்தில் தொடங்க வேண்டும், முக்கியமாக சொந்த பந்தங்களிடத்தில், பொதுவில் இதை கட்டாயம் செய்தே ஆகவேண்டும். தொழில் சார்ந்த இடங்களில் நீங்கள் உண்டானடிய இதை செய்ய வேண்டியதில்லை. குறைக்கலாம், அங்கே ஒழுக்க பயிற்சியை கடைசியாவை வைத்து கொள்ளுங்கள்.
Stay Tuned with Yogi, Will Continue...
Let’s Discuss through Mail too...
https://sranayoga.wordpress.com/
facebook.com/sranaguru
facebook.com/groups/sranayoga
twitter.com/Sranayogi
https://in.pinterest.com/sampathyogi/

 #DESIRE #EMOTION #KNOWLEDGE #YOGA #ecstasy #karma #dharma #sadhana #Upasana #Dhyana #abyaas #vyragya #Viveka #vidhya  

No comments:

Post a Comment

Review to Review

  Review to Review  #sampathyogi #sranayoga  #teacher #yoga #yogi #body #mind #intellect  #soul #ego #tamil